Skip to main content

Posts

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........
Recent posts

ஆவியிலும் என்றும் உண்மையிலும் RC Song

ஆவியிலும் என்றும் உண்மையிலும் வழிபட வாருங்கள் - இந்த  அவனியில் இறைவன் அரசினைக்காணும்  ஆனந்தம் பாருங்கள் உலகின் மாந்தர்களே உங்கள்  இதயத்தைத் திறந்திடுங்கள்  இறைவார்த்தையின் பொருள் காணுங்கள்  இகம் வாழ்ந்திடும் முறை காணுங்கள் உலகின் மாந்தர்களே உங்கள்  கரங்களைத் திறந்திடுங்கள்  வறியோருக்கு வழி காட்டுங்கள்  வளம் பொங்கிட வகை கூறுங்கள்

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா பாடல் வரிகள் | அன்னை மரியாள் பக்திப் பாடல்

 உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா உலகாளும் தாயே அருள் தாருமம்மா (1) முடமான மகனை நடமாட வைத்தாய்  கடல் நீரில் தவித்த கப்பலைக் காத்தாய் -2 பால் கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய்  பொருள் கொண்ட சீமான் உன் பாதம் சேர்த்தாய்-2 (2) கடல் நீரும் கூட உன் கோயில் காண  அலையாக வந்து உன் பாதம் சேரும் -2 அருள் தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம்  அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா-2 உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா, அன்னை மரியாள் பாடல் வரிகள், வேளாங்கண்ணி அன்னை பாடல், Tamil Christian Song Lyrics, Annai Mary Songs Tamil, Catholic Devotional Songs Tamil, Marian Devotional Songs, Tamil Christian Lyrics, அன்னை பக்தி பாடல்கள், வேளாங்கண்ணி பாடல்கள். #உம்மைதேடிவந்தேன் #சுமைதீருமம்மா #அன்னைமரியாள் #வேளாங்கண்ணிஅன்னை #TamilChristianSongs #ChristianSongLyrics #MarianSongs #CatholicSongs #TamilDevotionalSongs #AnnaiMarySongs #TamilChristian #ChristianMusic #VelankanniMatha #TamilLyrics #ChristianWorshipSongs

இடைவிடா சகாயமாதா இணையில்லாத தேவ மாதா! Madha song

இடைவிடா சகாயமாதா இணையில்லாத தேவ மாதா பாவவினை தீர்ப்பாய்  பதம் எமை சேர்ப்பாய்  நிதம் துணை சேர்ப்பாய் (1) ஆறாத மனப் புண்ணை ஆற்றிடுவாய் அன்னை தீராத துயர் தன்னை தீர்த்திடுவாய் -2 மாறாத கொடுமை தீராத வறுமை  தானாக என்றுமே மாற்றிடுவாய் -2 (2) கள்ள கபடின்றி கடுகளவு பயமின்றி உள்ளம் திறந்து சொல் உன் கதையை - 2  வெள்ளிபோல அவள் கருணை பாய்ந்திட  தேனூறும் வான் வாழ்வு தந்திடுவாய் -2

இரவு நேர நன்றியின் ஜெபம் | அமைதியான உறக்கத்திற்கான ஜெபம்

நம்பிக்கையின் இறைவா!   இந்த நாள் முழுவதும் என்னை பாதுகாத்து வழிநடத்தினீர். என் தேவைகளை அறிந்து உதவி புரிந்தீர் .உமக்கு நன்றி கூறுகின்றேன் .இந்த நாளில் என் உழைப்பை ஆசீர்வதித்தீர் நான் சந்தித்த மனிதர்கள் நான் செய்த பணிகளில் மனநிறைவை எனக்கு தந்தீர் உமக்கு நன்றி. இந்த இரவில் நான் அமைதியோடும் மனநிம்மதியோடும் உறங்க நல் உறக்கத்தை தாரும் .எனக்கு முன்னும் பின்னும் இடமும் வலமும் உம் வானத்தூதர்களை நிறுத்தி பாதுகாத்தருளும் புதிய நாளை காண செய்தருளும். ஆமென். இரவு ஜெபம், Night Prayer Tamil, உறங்குவதற்கு முன் ஜெபம், இரவு நேர நன்றியின் ஜெபம், Tamil Christian Prayer, அமைதியான உறக்க ஜெபம், தினசரி இரவு ஜெபம். Hashtags: #இரவுஜெபம் #NightPrayer #TamilPrayer #DailyPrayer #ChristianPrayer #TamilJebam #JesusPrayer #PrayerBeforeSleep #GoodNightPrayer #இயேசுகிறிஸ்து #ஜெபமாலை #TamilChristian #PrayerInTamil #BedtimePrayer #NightBlessings

வல்லமையுள்ள புனித அந்தோனியார் ஜெபம்#St Antony's Powerful prayer#Jesus#Bible

  கோடி அற்புதரான புனித அந்தோனியாரே வேண்டும் வரத்தை தட்டாமல் தருகின்ற புனிதரே எங்களின் துன்ப துயரங்களில் ஆதரவு கரம் தருபவரே உம்மையே நம்பி வந்தோம் உம் தயையை கேட்டு வந்தோம் இறைவாக்கு உரைக்கும் வல்லமை பெற்றவரே நாங்கள் இறைவார்த்தையின்படி வாழச செய்தருளும் காணாமல் போன பொருட்களை கண்டுபிடித்து தருபவரே நாங்கள் தொலைத்துவிட்டு அவதிப்படுகின்ற பொருட்களை கண்டெடுத்து தாரும் சாத்தானின் சோதனைகளில் விழுந்து தவிக்கிறோம் எங்களை கரம் பிடித்து தூக்கி எழுப்பிவிடும் அழியா நாவுடைய புனிதரே இறைமகன் இயேசுவிடம் எங்களுக்காய் பரிந்து பேசி எங்கள் வாழ்வையும் ஆன்மாவையும் நாங்கள் அழியாமல் என்றென்றும் காத்துக்கொள்ள உம் அருள் உதவியை வேண்டி ஜெபிக்கின்றோம் அருள் புரியும் பரிந்து பேசும் - ஆமென்

காலை நேர ஆசீர்வாத ஜெபம் | புதிய நாளுக்கான நன்றியின் ஜெபம்

அன்பும் இரக்கமும் நிறைந்த பரலோகத் தந்தையே, உம்மை முழு இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, இந்த புதிய நாளை எங்களுக்கு அருளியதற்காக உமக்கு நன்றியை செலுத்துகிறோம். பாதுகாப்பாக எழுந்து இந்த நாளைக் காணச் செய்த உமது கிருபைக்காக எங்கள் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி கூறுகிறோம். கர்த்தாவே, இன்று நடைபெறவிருக்கும் எங்கள் எல்லா செயல்களையும், திட்டங்களையும், பொறுப்புகளையும் உமது கரங்களில் ஒப்படைக்கிறோம். எங்கள் பாதைகளை நேராக நடத்தி, ஒவ்வொரு முடிவிலும் உமது ஞானத்தை அருளும். இந்த ஜெபத்தில் இணைந்திருக்கும் ஒவ்வொருவரையும், அவர்களின் குடும்பங்களையும் ஆசீர்வதியும். அவர்களின் இல்லங்களில் சமாதானம், மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை நிலைத்திருக்க அருள் செய்யும். ஆண்டவரே, புதிய கிருபைகளாலும், உமது அன்பாலும், பரிசுத்த ஆவியின் வல்லமையாலும் எங்களை நிரப்பும். ஆன்மீக வளர்ச்சிக்கும், விசுவாச வாழ்க்கைக்கும் தேவையான வரங்களையும் ஆசீர்வாதங்களையும் அருளும். இன்று முழுவதும் எங்களை பாதுகாத்து வழிநடத்தும். எல்லா தீமைகளிலிருந்தும் காத்து, உமது சமாதானத்தால் சூழ்ந்திருக்கும். எங்கள் தேவைகள் அனைத்தையும் உமது நேரத்தில் ...

குடும்ப சமாதான ஜெபம் | Family Prayer Tamil

ஜெபக் குறிப்பு: குடும்பங்களில் சமாதானமும் அன்பும் நிலைக்க ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, ஒவ்வொரு கணவன்-மனைவியையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். அவர்களின் உறவுகளை உமது கிருபையால் பாதுகாத்து ஆசீர்வதியும். கர்த்தாவே, கருத்து வேறுபாடுகள், மனக்கசப்புகள் மற்றும் குடும்பத்தில் ஏற்படும் எல்லா பிரச்சனைகளும் நீங்கி, உமது சமாதானம் அவர்களின் இதயங்களில் நிறையட்டும். கணவன்-மனைவி ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் மனதையும், மதிக்கும் குணத்தையும், விட்டுக்கொடுத்து வாழும் அன்பையும் அருளும். தவறுகளை மன்னித்து, புதிய தொடக்கத்தை உருவாக்கும் மனப்பக்குவத்தை வழங்கும். ஆண்டவரே, குடும்பத்தை ஞானமாக வழிநடத்த தேவையான அறிவையும் விவேகத்தையும் அருளும். அவர்களின் வார்த்தைகளிலும் செயல்களிலும் அன்பும் பொறுமையும் வெளிப்படட்டும். பொருளாதாரம், வேலை, உறவுகள் அல்லது வேறு எந்த காரணத்தினாலும் ஏற்பட்டிருக்கும் பதற்றங்கள் அனைத்தும் நீங்கி, குடும்பங்களில் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் நிலைத்திருக்க கிருபை செய்யும். உமது பிள்ளைகளின் உழைப்பை ஆசீர்வதித்து, அவர்கள் மேற...

குழந்தை வரம் வேண்டி ஜெபம் | Pregnancy Prayer Tamil

இன்றைய ஜெபக் குறிப்பு: குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளுக்காக ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, குழந்தை வரத்திற்காக ஏக்கத்தோடும் நம்பிக்கையோடும் காத்திருக்கும் ஒவ்வொரு கணவன்-மனைவியையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். அவர்களை உமது கிருபையால் நிரப்பி ஆசீர்வதியும். கர்த்தாவே, நீண்ட நாட்களாக காத்திருப்பதால் அவர்களின் மனதில் ஏற்பட்டிருக்கும் சோர்வு, வேதனை, கவலை மற்றும் ஏமாற்றங்களை நீக்கி, புதிய நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அருளும். ஆண்டவரே, ஆபிரகாமுக்கும் சாராளுக்கும் மனித இயல்பின்படி சாத்தியமற்றதாகத் தோன்றிய சூழ்நிலையிலும் அற்புதம் செய்து ஈசாக்கை அருளினீர். அதுபோல இன்று உம்மை நம்பி காத்திருக்கும் தம்பதிகளின் வாழ்க்கையிலும் அற்புதங்களை நிகழ்த்தும். மருத்துவ அறிக்கைகள், வயது, சூழ்நிலைகள் அல்லது மனிதர்களின் கருத்துக்கள் எந்தத் தடையாக இருந்தாலும், உமது வல்லமைக்கு முன்பாக அனைத்தும் விலகிப் போகட்டும். குழந்தை வரம் வேண்டி ஜெபிக்கும் குடும்பங்களில் மகிழ்ச்சியின் செய்தி விரைவில் கேட்கப்படட்டும். ஆண்டவரே, அவமானம், கே...

கடன் சுமை நீங்க ஜெபம்| Loan Prayer 🙏🏻

இன்றைய ஜெபக் குறிப்பு : கடன் சுமைகளில் இருந்து விடுதலை பெற ஜெபிப்போம் அன்பின் இயேசுவே, உம்மை நன்றியுள்ள இதயத்தோடு துதித்து மகிமைப்படுத்துகிறோம். ஆண்டவரே, இன்று கடன் சுமைகளாலும் பொருளாதார நெருக்கடிகளாலும் சோர்ந்து போயிருக்கும் உமது பிள்ளைகள் அனைவரையும் உமது அன்பான கரங்களில் ஒப்படைக்கிறோம். கர்த்தாவே, அவர்கள் பெற்றுள்ள கடன்களை அடைக்க தேவையான வருமான வாய்ப்புகளையும் புதிய ஆசீர்வாதத்தின் கதவுகளையும் திறந்து அருளும். அவர்களின் வாழ்க்கையில் நிதி முன்னேற்றம் ஏற்பட்டு, கடன் சுமைகளிலிருந்து விடுதலை பெற கிருபை செய்யும். கல்விச் செலவுகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக போராடிக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் தேவைகளை சந்தித்து ஆசீர்வதியும். அவர்களின் கண்ணீரையும் கவலைகளையும் மகிழ்ச்சியாக மாற்றும். ஆண்டவரே, உமது பிள்ளைகளின் உழைப்பை ஆசீர்வதித்து, அவர்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நல்ல பலன்களைத் தரச் செய்யும். அவர்கள் சம்பாதிக்கும் வருமானத்தை ஞானமாக நிர்வகிக்கவும், தேவையற்ற செலவுகளைத் தவிர்க்கவும் தேவையான அறிவையும் விவேகத்தையும் அருளும். வங்கி கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ப...