அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம் அவர் பலியினில் கலந்திட அவர் ஒளியினில் நடந்திட சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார் தோள்களில் நம்மை தாங்குவார் துயரினில் அவர் தேற்றுவார் சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார் ஆவியால் நம்மை நிரப்புவார் அமைதியை என்றும் அருளுவார் ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார் விடியலின் கீதமாக முழங்குவார் விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார் வாருங்கள்..........
அன்பினில் பிறந்த இறைகுலம் நாமே
அன்பினைத் காத்து அறம் வளர்ப்போமே
ஒரு மனத்தோராய் அனைவரும் வாழ்வோம்
அருளொளி வீசும் ஒருவழி போவோம்
பிரிவினை மாய்த்துத் திருமறை காப்போம்
பரிவுள்ள இறைவன் திருவுளம் காண்போம்
பிறப்பிலும் இயேசு இறப்பிலும் காட்டி
பெருமை செய்தாரே புனிதப் பேரன்பை
பிறந்த நம் வாழ்வின் பயன் பெற வேண்டும்
பிறரையும் நமைப்போல் நினைத்திட வேண்டும்
Comments
Post a Comment