Skip to main content

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் tamil RC songs

அழைக்கிறார் இயேசு ஆண்டவர் ஆவலாய் நாம் செல்லுவோம்  அவர் பலியினில் கலந்திட  அவர் ஒளியினில் நடந்திட  சாட்சிகளாய் என்றும் வாழ்ந்திட இந்நாளிலே தேடியே தேவன் வருகிறார் தன்னையே நாளும் தருகிறார்  தோள்களில் நம்மை தாங்குவார்  துயரினில் அவர் தேற்றுவார்  சுமைகளை சுகங்களாக மாற்றுவார் வளமுடன் வாழும் வழியைக் காட்டுவார் வாருங்கள் ஓருடலாய் இணைந்திடுவோம் வானகத் தந்தையை நாம் வணங்கிடுவோம் அன்பினால் உலகை ஆளுவார்  ஆவியால் நம்மை நிரப்புவார்  அமைதியை என்றும் அருளுவார்  ஆனந்தம் நெஞ்சில் பொழிகுவார்  விடியலின் கீதமாக முழங்குவார்  விடுதலை வாழ்வை நமக்கு வழங்குவார்  வாருங்கள்..........

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்|"Archanai malaraaga aalayathil varugindrom." 🌸🙏🏻

அர்ச்சனை மலராக ஆலயத்தில் வருகின்றோம்

ஆனந்தமாய்ப் புகழ் கீதம் என்றும் பாடுவோம் 

அர்ப்பணித்து வாழ்ந்திட அன்பர் உம்மில் வளர்ந்திட 

ஆசையோடு அருள் வேண்டிப் பணிகின்றோம்


தாயின் கருவிலே உருவாகும் முன்னரே 

அறிந்து எங்களைத் தேர்ந்த தெய்வமே 

பாவியாயினும் பச்சப் பிள்ளையாயினும் 

அர்ச்சித்திருக்கின்றீர் கற்பித்திருக்கின்றீர் 

மனிதராக புனிதராக வாழப் பணிக்கின்றீர் 

பிறரும் வாழ எங்கள் வாழ்வைக் கொடுக்க அழைக்கின்றீர் 

அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்


உமது வார்த்தையை எங்கள் வாயில் ஊட்டினீர் 

உமது பாதையை எங்கள் பாதையாக்கினீர்

உமது மாட்சியை எம்மில் துலங்கச் செய்கின்றீர்.

 உமது சாட்சியாய் நாங்கள் விளங்கச் சொல்கின்றீர் 

அழித்து ஒழிக்க கவிழ்த்து வீழ்த்தத் திட்டம் தீட்டினீர்

 கட்டி எழுப்ப நட்டுவைக்க எம்மை அனுப்பினீர் 

அஞ்சாதீர் என்று எம்மைக் காத்து வருகின்றீர்



Thanglish Version

Archanai malaraaga aalayathil varugindrom
Aanandhamaai pugazh geetham endrum paaduvom

Arppaniththu vaazhnthida anbar ummil valarnthida

Aasaiyodu arul vendi panigindrom

Thaayin karuvile uruvaagum munnare
Arindhu engalai therndha Deivame
Paaviyaayinum pachcha pillaiyaayinum
Archiththirukkindreer karpiththirukkindreer
Manidharaaga punidharaaga vaazha panikkindreer
Pirarum vaazha engal vaazhvaik kodukka azaikkindreer
Anjaadheer endru emmaik kaaththu varugindreer

Umadhu vaarththaiyai engal vaayil oottineer
Umadhu paadhaiyai engal paadhaiyaakkineer
Umadhu maatchiyai emmil thulangach seygindreer
Umadhu saatchiyaai naangal vilangach solgindreer
Azhiththu ozhikka kavilzhththu veezhththa thittam theettineer
Katti ezhuppa nattuvaikka emmai anuppineer
Anjaadheer endru emmaik kaaththu varugindreer 🙏🏻✨

Comments

Popular posts from this blog

தூய குழந்தை இயேசுவின் தெரசாவை நோக்கி ஜெபம்

 மகிழ்வும் இனிமையும் கமழும் பிறரன்பு என்னும்  ஆன்மீக விருந்தை தம்மோடு வாழ்ந்தவர்க்கு வழங்கிய சிறுமலரே,  பிறர் துன்பம் விளைவித்த நேரத்திலும் அவர்களை  அன்போடு ஏற்றுக் கொண்ட நறுமலரே ,  உம்வழி நாங்கள் நடக்கவும், அன்புப் பணிகளில் நிலைத்து வாழவும்  எமக்கு அருள் புரிவீராக  குழந்தை இயேசுவை அதிகமாக நேசித்த சின்ன ராணியே,  மாசற்ற குழந்தை உள்ளங்களாய் நாங்கள் வளர அருள் தாரும் - ஆமென்

புனித அந்தோணியார் நவநாள் ஜெபம் (Tamil & English)

  அன்பும் அருளும் நிறைந்த புனித அந்தோணியாரே , இறைவனிடத்தில் மிகுந்த அருள் பெற்றவரே, எங்கள் தேவைகளிலும் துன்பங்களிலும் எங்களுக்கு துணையாக இருங்கள். தவறிப்போனவற்றை கண்டுபிடிக்க உதவும் அருளாளரே, எங்கள் வாழ்க்கையில் தொலைந்துபோன சமாதானம், நம்பிக்கை, சந்தோஷம் ஆகியவற்றையும் மீட்டருள வேண்டுகிறோம். எங்கள் குடும்பங்களை ஆசீர்வதித்து, நோயாளிகளுக்கு ஆரோக்கியமும், துயரப்படுவோருக்கு ஆறுதலும், வேலை தேடுவோருக்கு நல்ல வாய்ப்புகளும் அருளுங்கள். நாங்கள் கேட்கும் வேண்டுதல்களை இறைவனிடத்தில் எடுத்துரைத்து, அவருடைய சித்தத்தின்படி எங்களுக்கு அருள் கிடைக்கச் செய்யும். புனித அந்தோணியாரே, எங்களுக்காக ஜெபியுங்கள். ஆமென். Anbum arulum niraintha Punitha Anthoniyare, Iraivanidathil miguntha arul petravare, Engal thevaigalilum thunbangalilum Engalukku thunaiyaga irungal. Thavaripponavatrai kandupidikka uthavum Arulalare, Engal vaalkaiyil tholaindhupona Samathanam, nambikkai, santhosham agiyavatraiyum Meettarula vendugiroam. Engal kudumbangalai aasirvathithu, Noiyaligalkku aarokkiyamum, Thuyarappaduvoru...

இறை இரக்க மன்றாட்டு

  அன்பும், இரக்கமும் உள்ள இயேசுவே உம்மை அன்பு செய்வோர் வாழ்வை என்றும் தாங்குபவரே! அனைத்தையும் வாழ வைக்கும் அன்பின் திருஉருவே! பாவிகளின் நம்பிக்கையும், மீட்பும் ஆனவரே! மனு உரு எடுத்து எங்களில் ஒருவராக வாழ்ந்தவரே! இதோ, அசைக்க முடியாத முழு விசுவாசத்துடன் உமது திருத்தலத்தில் கூடியுள்ளோம். உமது இரக்கத்தின் ஊற்றிலிருந்து எங்களுக்கு அருள்தாரும். அனாதைகளையும், விதவைகளையும், வறியோரையும், பாவிகளையும், ஆதரவற்றோரையும், ஒடுக்கப்பட்டவர்களையும் உமது அன்புக் கரங்களால் வழி நடத்தும், உமது இரக்கப் பெருக்கத்தினால் எங்கள் அனைவரையும் காப்பாற்றும். அன்பின் திருஉருவே, ஒற்றுமையின் அடையாளமே, விண்ணக மருத்துவரே தீராத நோய், வறுமை, துன்ப துயரங்களினால் சோர்வுற்று ஒற்றுமை அமைதியில்லாமல் அலையும் எங்களுக்கு ஆறுதல் தாரும். ஓ. என் இனிய இயேசுவே பாவ மன்னிப்பு கோரி நான் விடும் கண்ணீரும் உம் மீது நான் கொண்டுள்ள அன்பும் என் அன்றாட உணவாய் இருப்பதாக. என் இதயம் உமது ஆலயமாக அமைவதாக. மரண வேளையில் என் ஆன்மாவை உமது நித்திய இளைப்பாற்றியில் ஏற்றுக்கொள்ளும்.                    ...